இயேசுவை தரிசித்தவர் எத்தனைப் பேர்?
இயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இயேசு உயிர்த்தெழுந்தவுடன் இரண்டு மரியாள்கள் முன்னே தோன்றி அவர்களுக்கு இயேசு காட்சி தந்தார் என்று மத்தேயு கூறுகிறார்.
அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிற போது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்ட வந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 28:9
மாற்குவின் கூற்றுப்படி மகதலேனா மரியாளுக்கு மட்டும் இயேசு தரிசனமானார்.
வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்;.
மாற்கு 16:9
இரண்டில் எது உண்மை?