கல்லறையில் இருந்த தேவதூதர்கள் எத்தனை?
இரண்டு மரியாள்கள் கல்லறைக்கு வந்த போது ஒரு தேவதூதன் கல்லறைக்கு மேல் உட்கார்ந்திருந்ததாக மத்தேயு மாற்கு ஆகிய இருவரும் கூறுகிறார்கள்.
தன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல வெண்மையாகவும் இருந்தது.
மத் 28:2,3
அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
மாற்கு 16:5,6
ஆனால் லூக்கா கூறும் போது இரண்டு தேவதூதர்கள் இருந்ததாகக் கூறுகிறார்.
அதைக் குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டு பேர் அவர்கள் அருகே நின்றார்கள்.
லூக்கா 24:4
மகதலேனா மரியாள் கல்லறைக்கு வந்த போது தேவதூதன் யாரும் இருந்ததாக யோவான் கூறவில்லை.
வாரத்தின் முதல் நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக் கண்டாள். உடனே அவள் ஓடி, சீமோன் பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள்.
யோவான் 20:1,2
இயேசுவின் உடலைக் காணவில்லை என்று சீடர்களை அழைத்து வந்து காட்டிய பிறகு தான் இரண்டு தேவதூதர்களை மகதலேனா பார்த்ததாகவும் யோவான் கூறுகிறார்.
மேலும் இயேசு மரித்தோரில் இருந்து உயிர்த்தெழுந்தார் என்று தேவதூதன் அல்லது தேவதூதர்கள் கல்லறைக்கு வந்த பெண்களிடம் கூறியதாக மூன்று சுவிஷேசம் கூறும் போது யோவான் அதற்கு முரணாகக் கூறுகிறார். இயேசுவின் உடலை யாரோ கடத்திக் கொண்டு போய் விட்டார்கள் என்று அவர் நினைத்து மற்றவர்களிடம் போய்ச் சொன்னதாகக் கூறுகிறார்.
இவர்களில் யார் சொல்வது உண்மை?
அபூ ஜாபிர்