சீடர்களுக்கு இயேசு கூறியது பொய்யானது ஏன்?
இயேசு சீடர்களுக்குக் காட்சி தந்த போது அவர் கூறியதாக மாற்கு எழுதியதை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ போதகர்கள் பிசாசுகளை விரட்டுவதாகவும் நோய்களைப் போக்குவதாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். இதற்கு அவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துர்த்துவார்கள்;. நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
மாற்கு 16:17
சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
மாற்கு 16:18
உயிர்த்தெழுந்த இயேசு மேற்கண்டவாறு கூறி இருந்தால் அது நிச்சயம் நடக்க வேண்டும். இயேசு பொய் கூற மாட்டார். கிறித்தவ மக்கள் இயேசு உயிர்த்தெழுந்து மேற்கண்டவாறு கூறியதை சோதித்துப் பார்க்க வேண்டும். விஷத்தைக் குடித்தாலும் போதகர்கள் சாக மாட்டார்கள் என்று இதில் கூறப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு நாம் விஷத்தைக் கொண்டு வருகிறோம். அதை கிறித்தவ போதகர்கள் மக்கள் மத்தியில் குடித்துக் காட்டி சாகாமல் இருந்து காட்டத் தயாரா? ஒருவர் கூட இதற்குத் தயாராக இல்லாவிட்டால் இயேசு இப்படிக் கூறியிருக்க மாட்டார் என்பது உறுதியாகிறது. அவர் உயிர்த்தெழவில்லை என்பதும் உறுதியாகின்றது. இயேசு செத்த பின் உயிர்த்தெழவில்லை என்பதற்கு இதையே அறைகூவலாக கிறித்தவ போதகர்களுக்கு நாம் முன் வைக்கிறோம்.
அபூ ஜாபிர்