நீதிமான்களை கர்த்தர் கைவிடுவதில்லை
தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ள செய்தி தெரிந்த பின் இயேசு கடவுளிடம் திரும்பத் திரும்ப மன்றாடியுள்ளார். நீதிமானாகிய இயேசு தன்னைப் படைத்த கர்த்தரிடம் அழுது புலம்பி மன்றாடி இருக்கும் போது அதைக் கர்த்தர் கண்டு கொள்ளாமல் இருப்பாரா?
உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
லூக்கா 22:42,43
வானத்தில் இருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான் என்று லூக்கா கூறுகிறார். இயேசு செய்த பிரார்த்தனையை கர்த்தர் ஏற்றுக் கொண்டு அவரைக் காப்பாற்றவே தூதனை அனுப்பி பலப்படுத்தினார்.
தன்னைக் காப்பாற்றுமாறு கர்த்தரிடம் இயேசு மன்றாடி இருக்கும் போது கடவுள் அவரைக் காப்பாற்றி இருப்பார். ஏனெனில் நல்லோர்களின் வேண்டுதல் கர்த்தரால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று பைபிள் கூறுகிறது.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அனேகமாயிருக்கும். கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.
(சங்கீதம் 34:19)
இதன் அடிப்படையில் பார்த்தாலும் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டிருக்க முடியாது.
இயேசு சிலுவையில் கொல்லப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்பெற்று எழுந்து கர்த்தரின் வலது பாரிசத்தில் அமர்ந்தார் என்பது உண்மையானால் இயேசு இப்படி பிரார்த்தித்திருக்க மாட்டார்.
கர்த்தரே சீக்கிரம் என்னை அழைத்துக் கொண்டு உமக்கௌ அருகில் அவைத்துக் கொள்வீராக என்று தான் பிரார்த்தனை செய்திருப்பார். அவ்வாறு பிரார்த்தனை செய்யாமல் தன்னைக் காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்ததில் இருந்து சிலுவைப்பலி என்பது பொய்யான தகவல் என்று அறிந்து கொள்ளலாம்.
மோஸே