மரிக்காத சீடன் இப்போது எங்கே?
இயேசு மேலுலகம் சென்ற பின் மீண்டும் வந்து சிலருக்கு காட்சி தந்தார் என்று யோவான் கூறுகிறார். இதை மற்ற சுவிஷேசக்காரர்கள் கூறவில்லை. அவ்வாறு அவர் தரிசனம் தந்த போது ஒரு சீடன் தன் பின்னே வருவதைக் கண்டார். இது குறித்து யோவான் கூறும் போது
பேதுரு திரும்பிப் பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக் கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்;. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சி கொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
(யோவான் 21:20-24)
அவன் மரிப்பதில்லை என்பதற்கும் இயேசு வரும் வரை அவன் உயிரோடு இருப்பான் என்பதற்கும் ஒரே அர்த்தம் தான். ஆனால் இயேசு வரும் வரை இருப்பான் என்று சொல்லப்பட்ட அந்தச் சீடன் எங்கேயும் காணோமே? அவன் இருந்திருந்தால் இரண்டாயிரம் வயதுடையவனாக இருக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக வசிக்கும் அந்த மனிதன் எங்கே இருக்கிறான்? அப்படி யாரும் இல்லாவிட்டால் இயேசு கூறியதாக யோவான் கூறியது பொய்யாகிவிடும். இது பொய் என்றால் அவர் கூறிய ஒட்டு மொத்த சம்பவமும் சந்தேகத்துக்கு உரியதாகி விடும்.
மர்யம் செல்வன்