வேலைக்காரன் காதை வெட்டியக் கதை
இயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் பெரும் படையுடன் வந்திருக்கும் போது பிரதான ஆசாரியானுடைய காதை பேதுரு வெட்டியதாக மேற்கண்ட வசனத்தில் யோவான் கூறுகிறார். காது வெட்டிய கதையை மத்தேயுவும் கூறுகிறார்.
இயேசுவைப் பிடிக்க அதிகாரிகள் வந்திருக்கும் போது வேலைக்காரனை பேதுரு ஏன் வெட்ட வேண்டும்? அதனால் இயேசு தப்பித்துக் கொள்வாரா?
இயேசு மாட்டிக் கொண்டவுடன் எனக்கு இயேசுவைத் தெரியாது என்று கூறும் அளவுக்கு நெஞ்சுறுதி மிக்க (?) பேதுரு பெரும் படையினர் முன்னிலையில் அவர்களின் வேலைக்காரனை வெட்டியிருக்க முடியாது.
அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்
மாற்கு 14:50
அதிகாரிகள் வந்த உடன் இயேசுவை அம்போ என்று விட்டு விட்டு ஓட்டம் பிடித்தவர்கள் அரசு ஊழியரின் காதை வெட்டும் அளவுக்குத் துணிந்திருக்க முடியாது.
இயேசுவின் மீது அந்த அளவுக்கு பாசம் இருந்தது என்றால் யூதாஸ் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு கூறியவுடன் அவனை வெட்டி இருக்க வேண்டும். அல்லது காட்டிக் கொடுத்த பிறகாவது அவனை வெட்டி இருக்க வேண்டும்.
எந்த அதிகாரியும் தமது ஊழியரைத் தாக்குவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார். பேதுரு வேலைகாரனின் காதை வெட்டி இருந்தால் அந்த நிமிடமே பேதுருவின் தலையைச் சீவி இருப்பார்கள். அல்லது அவரையும் பிடித்துக் கொண்டு போய் இருப்பார்கள். ஆனால் இது அந்தப் படையினர் மத்தியில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல் அதிகாரிகள் இருந்ததாக பைபிள் சித்தரிப்பது நம்பும்படி இல்லை.
கற்பனையாகவே இதைப் புணைந்திருக்கிறார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.
கர்த்தர் பிரியன்