உதைக்கும் கணக்குகள்
i) யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்தில் அகீயாவின் குமாரனாகிய பாஷா இஸ்ரவேல் அனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் அரசாண்டான்
(இரண்டாம் ராஜாக்கள் 15:33)
பாஷா நித்திரையடைந்து தன் பிதாக்களோடே சேரவே திரிசாவில அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(இரண்டாம் ராஜாக்கள் 16:6)
ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய மூன்றாம் வருஷத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலர்களுக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் ஆண்டதாகவும் மேலே உள்ள முதல் வசனம் கூறுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்து உடன் அவன் மகன் ராஜாவாக ஆனதாக இரண்டாம் வசனம் கூறுகின்றது.
யூதாவுக்கு ஆசா ராஜாவான மூன்றாம் வருஷம் பாஷா ஆட்சிக்கு வந்து 24வருடங்கள் ஆட்சி செய்து மரணித்திருக்கிறான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கிறான். இதைக் கவனத்தில் கொண்டு பின்வரும் வசனங்களைப் படியுங்கள்!
ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவிடம் போக்குவரத்தாயிராத படி ராமாவுக்கு அரண் கட்டினான்.
(இரண்டாம் நாளாகமம் 16:1)
ஆசா அரசாண்ட 27ம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவன் உயிர்த்தெழுந்தான் என்று கிறித்தவ உலகம் சொல்லப் போகின்றதா? அப்படிச் சொன்னால் இயேசுவின் மகிமை என்னாவது?
ii) சாலமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும் தனக்கு ஒரு ராஜா ஒரு அரண்மனையையும் கட்டக் கட்டளையிட்டு சுமை சுமப்பதற்கு எழுபதினாயிரம் பேரையும் மலையில் கல்வெட்டுதற்கு எண்பதினாயிரம் பேரையும் இவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மூவாயிரத்து அறுநூறு பேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
(இரண்டாம் நாளாகமம் 2:2)
சாலமோன் அரண்மனை கட்டும் போது அதனை மேற்பார்வையிடுவதற்காக மூவாயிரத்து அறுநூறு பேரை ஏற்படுத்தியதாக இவ்சவனம் கூறுகிறது. இது உத்தேசமான கணக்கு அன்று; சாலமோன் எண்ணிப் பார்த்து ஏற்படுத்திய சரியான கணக்கு எனவும் இவ்வசனம் கூறுகிறது. இதே வசனத்தை முதலாம் ராஜாக்கள் பின்வருமாறு கூறுகின்றது.
… இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைப் பார்த்துக் கொள்வதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர்மூவாயிரத்து முன்னூறு பேர்இருந்தார்கள்.
(முதலாம் ராஜாக்கள் 5:16)
துல்லியமாக எண்ணி நியமிக்கப்பட்டவர்களில் ஏனிந்த முரண்பாடு? சாலமோன் எண்ணிக்கையில் தவறு செய்து விட்டாரா? அல்லது அந்த இரண்டு ஆகமங்களையும் கர்;த்தரின் தூண்டுதலினால் எழுதிய(?) இருவரில் ஒருவர் தவறான எண்ணிக்கையைக் குறிப்பிட்டு விட்டாரா? இரண்டு எண்ணிக்கையில் எது உண்மை என்றாலும் பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.
iii) சாலமோன் கட்டிய ‘கடல் தொட்டி” என்ற தடாகத்தின் கொள்ளளவு பற்றி பைபிளின் இரண்டு ஆகமங்கள் முரண்பட்ட அளவைக் கூறுகின்றன.
…அது இரண்டாயிரம் குடம் தண்ணீர்பிடிக்கும்.
(முதலாம் ராஜாக்கள் 7:26)
அது மூவாயிரம் குடம் தண்ணீர்பிடிக்கும்.
(இரண்டாம் நாளாகமம் 4:5)
பாபிலோன் ராஜாவாகிய நெபுகாத் நேச்சார்என்பவரால் சிறைப்பிடிக்கப்பட்டவர்களும்,பல பட்டணங்களுக்கு அனுப்பப்பட்டவர்களுமான இஸ்ரவேலர்களின் தொகையை எஸ்ரா, நெகேமியா ஆகிய இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களின் பட்டியல்களிலும் ஏராளமான முரண்பாடுகள்! எஸ்ராவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் இரண்டாம் அதிகாரத்திலும் நெகேமியாவின் ஏழாம் அதிகாரத்திலும் இந்தப் பட்டியலைக் காணலாம்.
பட்டியல் எஸ்ரா நெகேமியா
ஆரகின் சந்ததியர் 775 652
பகத், மோவாபின் 2812 2318
சத்தூவின் சந்ததியர் 945 845
பெபாயீன் சந்ததியர் 629 628
பாணியின் சந்ததியர் 642 648
அஸ்காதின் சந்ததியர் 1222 2322
அதொனிகாமின் சந்ததியர் 666 667
பிக்வாயின் சந்ததியர் 2056 2067
ஆதினின் சந்ததியர் 454 665
பேத்சாயின் சந்ததியர் 323 324
காசூமின் சந்ததியர் 223 328
செனாவின் சந்ததியர் 3630 3930
இரண்டு ஆகமங்களும் இப்படி பல முரண்பாடுகள் கொண்ட பட்டியலைக் கூறுகின்றன. கர்த்தருடன் கடுகளவும் சம்பந்தப்படாத -கேள்விப்பட்டவைகளை எழுதிவிடக் கூடிய- மிகவும் சாதாரண மக்களால் எழுதப்பட்டிருந்தால் மட்;டுமே இவ்வளவு முரண்பாடு இருக்க முடியும். இறை வேதமாக நம்புவது ஒரு புறமிருக்கட்டும். நம்பத்தகுந்த வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகக் கூட நம்ப முடியாத அளவுக்கு முரண்பாடுகள்.
iஎ) ஆகாஸ் ராஜாவான போது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாரு வருஷம் அரசாண்டான்
(இரண்டாம் ராஜாக்கள் 16:2)
ஆகாஸ் நித்திரையடைந்து தன் பிதாக்களோடு சேரவே தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான். அவன் குமாரன் எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
(இரண்டாம் ராஜாக்கள் 16:20)
இந்த இரண்டு வசனங்களும் கூறுவதைக் கவனமாகப் படியுங்கள்! ஆகாஸ் என்பவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவானதாகவும், ஆகாஸ் என்பவன் இருபது வயதில் ராஜாவாகி பதினாறு ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகவும் கூறுகின்றன. அதவாது தன் முப்பத்தாறாம் வயதில் (20+16) ஆகாஸ் மரணித்திருக்கிறான். அவன் மரணித்தவுடன் அவனது மகன் எசேக்கியா ராஜாவாயிருக்கிறான்.
இந்த விபரங்களைப் பதிய வைத்துக் கொண்டு பின்வரும் வசனத்தைப் படியுங்கள்!
ஆகாஸ் எனும் யூதா ராஜாவின் குமாரன் எசக்கியா ராஜாவானான். அவன் ராஜாவான போது அவனுக்கு இருபத்தி ஐந்து வயது.
(இரண்டாம் ராஜாக்கள்; 18:2)
முப்பத்தி ஆறு வயதில் மரணித்த ஒருவனுக்கு அவன் மரணித்த சமயத்தில் இருபத்தி ஐந்து வயதில் மகன் இருப்பது எப்படிச் சாத்தியமாகும்?
முப்பத்தி ஆறு வயதில் மரணித்தவனுக்கு இருபத்தி ஐந்து வயதில் மகன் இருக்க வேண்டுமென்றால் அவன் தன் பதினொன்றாம் வயதில் தந்தையாகியிருக்க வேண்டும். 11 வயதில் தந்தையாக இருக்க வேண்டும் என்றால் 10 வயதில் அவன் இல்லற வாழ்வைத் துவக்க வேண்டும். பத்து வயதில் எந்த ஆணும் குழந்தை பெரும் பருவத்தை அடைவதில்லை.
ஒன்று அவன் 36 வயதில் மரணமடைந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவன் மகன் இருபத்தி ஐந்து வயது உடையவனாக இருந்தது பொய்யாக இருக்க வேண்டும். இரண்டில் எது பொய் என்றாலும் பைபிளில் பொய் இடம் பெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.
வயது பற்றிக் குறிப்பிடும் போது தவறுதலாக அச்சாகிக இருக்கக் கூடும் என்று சமாளிக்க முடியாது. ஏனெனில் மற்றொரு ஆகமத்திலும் இந்த விபரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகாஸ் 36 வயதில் மரணமடைந்த செய்தி இரண்டாம் நாளாகமம் 28:1இலும் அவரது மகன் 25 வயதில் ராஜாவான செய்தி இரண்டாம் நாளாகமம் 29:1இலும் கூட இடம் பெற்றுள்ளது.
வெவ்வேறு தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டதாக நம்பப்படும் இரண்டு ஆகமங்களிலும் ஒரே மாதிரியான தவறுகள் ஏற்பட்டிருப்பதால் எந்தச் சமாதானமும் கூற வழியில்லை. சாதாரண மனிதர்களால் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் ஏற்பட முடியும்.
எ) சாலொமோன் ராஜாவிடம் இருந்த படை பலம் பற்றி முதலாம் ராஜாக்கள்,இரண்டாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.
சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் ரதங்களும் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.
(இரண்டாம் நாளாகமம் 9:25)
இரதக் குதிரைகளுக்குரிய லாயங்கள் சாலொமோனுக்கு நாற்பதினாயிரம் இருந்தன. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்.
(முதலாம் ராஜாக்கள் 4:26)
சாலொமோனுக்கு இருந்த ரதக்குதிரை லாயங்கள் நாலாயிரமா? நாற்பதினாயிரமா?
எi) தாவீது ராஜாவிடம் இருந்த பராக்கிரமசாலிகளைப் பற்றியும் அவர்களது பராக்கிரமம் பற்றியும் பைபிளின் இரண்டாம் சாமுவேல், முதலாம் நாளாகமம் ஆகிய இரண்டு ஆகமங்களும் குறிப்பிடுகின்றன. இறை வேதத்துக்குத் தகாத முரண்பாடுகள் இவ்விரு ஆகமங்களிலும் காணப்படுகின்றன.
தாவீதிடமிருந்து பராக்கிரம வீரர்இவர்களே! தக்கிமோனியனான யோஷேப்பஷேபத் மூவரில் மேலானாவன். இவன் எண்ணூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாக ஈட்டியை ஆட்;டினவன்…
(இரண்டாம் சாமுவேல் 23:8)
தாவீதுக்கு இருந்த அந்த பராக்கிரம வீரரின் இலக்கமாவது; தக்மோனியின் குமாரன் யாஷொபியாம். இவன் முப்பது வீரருக்குத் தலைவன். இவன் முன்னூறு பேரை ஒருமிக்க வெட்டி அவர்கள் மேல் வெற்றிக் குறியாகத் தன் ஈட்டியை ஆட்டினவன்…
(முதலாம் நாளாகமம் 11:11)
அவன் தன் ஈட்டியை ஆட்டியது எண்ணூறு நபர்கள் மீதா? முன்னூறு நபர்கள் மீதா?இரண்டில் கர்த்தர்சொன்னது எது? கர்த்தரின் பெயரால் உண்டு பண்ணிச் சொன்னது எது?
எii) தாவீது எனும் தீர்க்கதரிசி தனது சேனாதிபதியிடம் இஸ்ரவேல் மக்களின் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளையிட்ட ஒரு செய்தியை இரண்டாம் சாமுவேல் என்ற ஆகமும் முதலாம் தினவர்த்தமானம் (அல்லது முதலாம் நாளாகமம்) என்ற ஆகமும் குறிப்பிடுகின்றன.
அவரது கட்டளைப்படியே அவரது சேனாதிபதி யோவாப் என்பவர், தாண் என்ற ஊர் முதல் பெயேர்ஷெபா என்ற ஊர்வரையிலுள்ள அத்தனை ஊர்களிலும் சுற்றித் திரிந்து மக்கள் தொகையயைக் கணக்கெடுத்து தாவீதிடம் ஒப்படைக்கிறார். இந்தச் செய்தியையும் மேற்கண்ட இரண்டு ஆகமங்களும் கூறுகின்றன.
இரண்டாம் சாமுவேல் கூறுவதைப் பாருங்கள்:-
யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலே பட்டயம் எடுக்கத்தக்க யுத்த வீரர்எட்டு லட்சம் பேர்இருந்தார்கள். யூதாவிலே ஐந்து லட்சம் பேர்இருந்தார்கள்
(இரண்டாம் சாமுவேல் 24:9)
இதே சம்பவத்தை முதலாம் நாளாகமம் பின்வருமாறு கூறுகிறது.
ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை யோவாப் தாவீதினிடம் கொடுத்தான். இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் எடுக்கத் தக்க வீரர்பதினொரு லட்சம் பேரும் யூதாவில் பட்டயம் எடுக்கத்தக்க வீரர்நாலு இலட்சத்து எழுபதினாயிரம் பேரும் இருந்தார்கள்
(முதலாம் நாளாகமம் 21:5)
மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக் காலத்தில் அந்தச் சின்னஞ்சிறு பிரதேசத்தில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், பட்டயம் எடுக்கத் தெரியாதவர்கள்,ஊனமுற்றவர்கள், பொது மக்கள் நீங்கலாக இவ்வளவு போர் வீரர்கள் வாழ்ந்திருக்க முடியுமா? என்ற சந்தேகத்தை விட்டு விடுவோம். பைபிளை இறை வேதம் என்று நம்பும் மக்களிடம் நாம் கேட்பது இது தான்! எட்டு லட்சமா? பதினொரு லட்சமா?நாலு லட்சத்தி எழுபதினாயிரமா?
யோவோப் கணக்கெடுத்து வழங்கிய பட்டியலைப் பற்றி பேசும் இரண்டு ஆகமங்களுமே இறைவனால் வழங்கப்பட்ட வேதம் என்றால் ஏனிந்த முரண்பாடு?முரண்பட்ட இரண்டு தகவல்களும் உண்மையாக இருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட விதியினடிப்படையில் இவ்விரண்டில் எது உண்மை?
இரண்டில் எதை உண்மை என்று ஏற்றாலும் பொய்யும் பைபிளில் உள்ளதையும் சேர்த்தே ஒப்புக் கொண்டாக வேண்டும்.
இரண்டும் வெவ்வேறு நிகழ்ச்சிகளாக இருக்குமோ?
வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பாக இருக்குமோ என்றெல்லாம் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. இரண்டுமே ஒரே காலத்தில் நடந்த ஒரே நிகழ்ச்சி தான். அந்த அதிகாரங்களை முழுமையாகப் பார்வையிட்டு எவரும் உறுதி செய்து கொள்ளலாம்.