வானவர்கள் ஒருவரா? அல்லது பலரா?
கேள்வி
கீழ் வரும் வசனத்தில் இருந்து மரியமிடம் வந்த வானவர்கள் ஒருவரா ? அல்லது பலார ? இது முரண்படுகிறது என்று கேட்கிறார்கள் 19:19 , 3:45
PJ அவர்களின் பதில்
திருக்குர் ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்த்ள்ளன.
ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும் இன்னும் பல அமைச்சர்களும் பல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது
அ. இந்த நிக்ழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார்
ஆ. முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்
இ. அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
ஈ. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்
இப்படி நான்கு வித்மாக இன்னும் அதிகமான வகைகளில் இது பற்றி பேசலாம். இவை அனைத்துமே ஒன்றுக்கொன்று முரண் கிடையாது. அனைத்துமெ உண்மை தான்.
பல வாணவர்கள் வந்து ஒருவர் ம்ட்டும் பேசும் போது அந்த ஒருவர் பேசியதாக கூறினாலும் அதுவும் சரிதான். பலரும் பேசினார்கள் என்றாலும் அதுவும் சரிதான். பேசியது ஒருவர் என்றாலும் அனைவரி சார்பிலும் அவர்கள் பேசியதால் அனைவரும் பேசியதாகத் தான் பொருள்.
பிரதமரை சந்திக்க ஐந்து பேர் செல்கிறோம். அதில் ஒருவர் கோரிக்கையை வலியுறுத்தி பேசுவார். இன்னார் பிதரமரிடம் பேசினார் என்றும் இதை சொல்லலாம். ஐவரும் பேசினார்கள் என்றும் சொல்லலாம். அது போல் தான் மேற்க்ண்ட வசனமும் சொல்கிறது. இரண்டு உண்மைகளை இரண்டு வகலயில் சொல்கிறது என்ற சாதாரன அறிவு கூட இல்லாமல் இப்படி கேள்வி எழுப்புகின்றனர்.
குர் ஆனுக்கு எதிரான நூறு கேள்விகள் என்ற ஒரு பட்டியலைப் பார்த்தோம். அதில் முக்கால் வாசி கேல்விகள் இந்த வகையில் தான் இருந்தன. ஆனால் நாம் பைபிளுக்கு எதிராக எழுப்பும் கேள்விகள இத்தகைய மடமை இல்லை என்பதையும் உணருங்கள்.