கல்லறைக்கு முதலில் வந்தவரில் முரண்பாடு
சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.
சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட இயேசுவின் உடல் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. கல்லறைக்குள் வைக்கப்பட்ட உடல் காணாமல் போனது பற்றி நான்கு சுவிஷேசக்காரர்களும் முரண்பட்டுக் கூறுகிறார்கள்.
ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான்.
மத் 28:1,2
இரண்டு மரியாள்கள் கல்லறைக்கு வந்த போது ஒரு தேவதூதன் கல்லறைக்கு மேல் உட்கார்ந்திருந்ததாக மத்தேயு மாற்கு ஆகிய இருவரும் கூறுகிறார்கள்.
இயேசுவின் கல்லறை அருகில் இருந்த இரண்டு தூதர்கள் இரண்டு மரியாள்களிடமும் இயேசு உயிர்த்தெழுந்த செய்தியை சீடர்களுக்குச் சொல்லும் படியும் இயேசுவை கலிலேயா எனும் ஊரில் சந்திப்பீர்கள் என்றும் சீடர்களிடம் கூறச் சொன்னதாக மத்தேயு கூறுகிறார். மாற்குவும் (16:7) இதைக் கூறுகிறார்.
கலிலேயா என்ற ஊரில் சீடர்களைச் சந்திக்கவிருப்பதாக அந்தப் பெண்கள் மூலம் தூதர்கள் சொல்லி அனுப்பினார்கள் என்று மூன்று சுவிஷேசங்கள் கூறுகின்றன.
இயேசு கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்த பின் அவரைச் சந்தித்தவர்கள் குறித்த தகவலிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றன.